×

பொற்கோயில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு: 5 பேர் கைது

அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அருகே கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் பலத்த சப்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 2 பேர் காயமடைந்தனர். பொற்கோயிலுக்கு அருகே குண்டு வெடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் மீண்டும் குண்டுவெடித்தது.தகவலறிந்து காவல் துறையினர் அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசாத்வீர் சிங்,அம்ரீக் சிங்,சாகிப் சிங்,ஹர்ஜித் சிங்,தர்மிந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post பொற்கோயில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Golden Temple ,Amritsar ,Punjab ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...