×

அமராவதி குளம் அருகே குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: நீரூற்று போல தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சி..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை அடுத்த அமராவதி குளம் அருகே குடிநீர்குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையை கடக்கும் வாகனங்கள் நனைந்தபடி செல்கின்றன. திங்கள் சந்தையை அடுத்த காட்டாதுறை பகுதியில் இருந்து இரணியல் பகுதிக்கு இரணியல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர்வடிகால் மூலம் சாலையோரம் ராட்சசக்குழாய்கள் பதிக்கப்பட்டு. குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோழிப்போர்விளை அமராவதி குழத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் குடிநீர் திடீர் நீரூற்று போலகொட்டியது. சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை தண்ணீர் மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சியடித்து வருகிறது. இதனால் சாலையில் கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீருற்றி நனைந்தபடி செல்கின்றனர். நடந்து செல்வோர் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

The post அமராவதி குளம் அருகே குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: நீரூற்று போல தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Amaravati pond ,Kanyakumari ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!