×

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து மேற்படிப்புக்கு உதவி செய்வதாக உறுதி

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரேயா என்ற திருநங்கை மாணவி தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து அவர் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்ரேயா பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார்.

இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 337 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இவர் தனது மேற்படிப்புக்கு உதவி செய்யுமாறு உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து மேற்படிப்புக்கு உதவி செய்வதாக உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Shreya ,Pallipalayam ,Namakkal district ,Udayanidhi Stalin ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...