×

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

மதுரை, மே 11: மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி(58). இவர் கடந்த 9ம் தேதி ஜெய்ஹிந்த்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்து வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவர், வீரமணியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.400ஐ பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேம்ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jaihindpuram ,Dinakaran ,
× RELATED ஆயுதங்களுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது