×

திருவாரூரில் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம்

திருவாரூர், மே11: திருவாரூரில் 13ம் தேதி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொ) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நாளை மறுதினம் (13-ம் தேதி) திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் மற்றும் ஜீவனாம்சம், மணமுறிவு மற்றும் மோட்டார் வாகன விபத்து, காசோலை வழக்கு போன்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணலாம். இதனால் இதில் வழக்குகளின் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : People's Court ,Tiruvarur ,Lok Adalat ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...