×

காதலியை திருமணம் செய்து வைக்காததால் கண்ணாடியால் குத்தி வாலிபர் தற்கொலை

கடலூர்: கடலூர் அருகே உள்ள கேஎன் பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சக்தி ஆகாஷ், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி சக்தி ஆகாஷ் பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். அவர்கள் மறுத்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்டதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த சக்தி ஆகாஷ் நேற்றுமுன்தினம் இரவு தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். மேலும் வீட்டிலிருந்த விநாயகர் போட்டோவை உடைத்து, அதில் உடைந்த கண்ணாடியை எடுத்து இடது பக்க தோள் பட்டையில் தானே குத்திக் கொண்டுள்ளார். இதில் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் மயங்கி விழுந்தார். பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

The post காதலியை திருமணம் செய்து வைக்காததால் கண்ணாடியால் குத்தி வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Saravanan ,KN Pettai ,Shakti Akash ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!