×

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி முன் 4 போலீசார் ஆஜர்

நெல்லை: பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முன் நேற்று 4 போலீசார் ஆஜராயினர். அம்பை. போலீஸ் சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு புகார்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது.இதுவரை ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது 4 வழக்குகள் பாய்ந்துள்ளன.

இந்நிலையில் சிபிசிஐடி ஆர்கனைஸ்டு கிரைம் இன்வஸ்டிகேஷன் ஏடிஎஸ்பி சங்கர் முன், ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் கார் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ், கன்மேன்கள் இசக்கிமுத்து, சதாம் ஆகியோர் நேற்று ஆஜராயினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி முன் 4 போலீசார் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nellai ,Dinakaran ,
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...