×

கேரளாவில் 22 பேர் பலியான சம்பவம் படகு ஓட்டுனர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் தானூரில் 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக படகின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே தானூரில் கடந்த 7ம் தேதி சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள்.

படகின் உரிமையாளர் நாசர், அவர் தப்புவதற்கு உதவிய உறவினர்கள் சலாம் (53), வாகித் (27), நண்பர் ஷாபி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே படகின் ஓட்டுனர் தினேசனை போலீசார் கைது செய்து உள்ளனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் 22 பேர் பலியான சம்பவம் படகு ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thanur, Kerala ,Dinakaran ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...