நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பல் பறிபோனவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மன் அனுப்பியும் செல்லப்பா, இசக்கிமுத்து உள்பட 4 பேர் ஆஜராகாததால் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 பேரிடமும் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி சங்கர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளார். பல் விவகாரத்தில் 4வதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புகார்தாரர் வேதநாராயணனையும் சிபிசிஐடி விசாரித்தது.
The post அம்பாசமுத்திரம் அருகே பல் பறிபோனவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.