ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றிகளை தெரிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதில் வனுஜா என்பவர் வேளாண் அறிவியல் பாடப்பிரிவில் 551 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அருள் கணித பாடத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மோகன்ராஜ் கணிதம் மற்றும் அறிவியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் நன்றியையும் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்து அனைவரும் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
The post பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.