×

குண்டாசில் இருவர் கைது

நெல்லை, மே 10: நெல்லை அருகே கொலை முயற்சி, மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பாளை அருகே சீவலப்பேரியைச் சேர்ந்த ராமரின் மகன் அழகுராஜ் (28). இவர் மீதும், அதே பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி மகன் சின்னத்துரை (27) என்பவர் மீதும் கொலை முயற்சி, மணல் கடத்தல் மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மற்றொரு வழக்கில் கைதான இவர்கள் இருவரும் பாளை மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டி நெல்லை எஸ்.பி. சிலம்பரசன், கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில் அழகுராஜ், சின்னத்துரை ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

The post குண்டாசில் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Nellai ,Gundasil ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...