×

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு

 

திருப்புத்தூர், மே 10: திருப்புத்தூர் அருகே தரியம்பட்டி கிராமத்தில் வழிவிடும் விநாயகர், வடக்கு வாசல் செல்வி அம்மன், கருப்பர் ஆலய வருடாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து மாலை, துண்டு வேட்டி அணிவித்து மஞ்சுவிரட்டு காளைகளை அலங்கரித்து தரியம்பட்டி பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்த மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் தொழுவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனையடுத்து மேல பட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சித்ரா அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி, திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், தரியம்பட்டியைச் சேர்ந்த ராஜா, பெரியகருப்பன், லட்சுமணன், வெள்ளைகண்ணு, பெரியகருப்பன் ஆகிய ஐந்து பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எஸ்.ஐ. விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Vinayakar ,Dariyampatti ,North Gate ,Amman ,Karupar ,Dinakaran ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு