×

மதுரை ரயில் நிலைய ஆபீசில் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மதுரை, மே 10: மதுரை ரயில் நிலைய ஓபன் லைன் பிரிவு அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம்யூ சார்பில் 1974ல் நடைபெற்ற போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம் நடந்தது.ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க 1974ல் வேலைநிறுத்தம் மேற்கொண்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், பணியிழப்பு, பணியிடை நீக்கம் போன்ற பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் நடந்த இக்கூட்டத்திற்கு உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இதில் கோட்ட செயலாளர் ஜெ.எம்.ரபிக், கோட்ட தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் சீதாராமன், சபரிவாசன், ஜூலியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓடும் தொழிலாளர்கள் பிரிவு கோட்ட செயலாளர் அழகுராஜா நன்றி கூறினார்.

The post மதுரை ரயில் நிலைய ஆபீசில் தியாகிகளுக்கு வீரவணக்கம் appeared first on Dinakaran.

Tags : Martyrs ,Madurai Railway Station Office ,Madurai ,Madurai Railway Station Open Line Division Office ,SRMU ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...