×

பாலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: பாலூர் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், இம்மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு வட்டத்தில் பாலூர் கிராமத்தில் வரும் 25.5.2023 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்’ என கூறப்பட்டுள்ளது.

The post பாலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Human Justice ,Day Camp ,Balur ,Chengalpattu ,Collector ,Rahul Nath ,Day ,Human ,Justice Day Camp ,Balur village ,Dinakaran ,
× RELATED பாலூர் – கண்டிகை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நேரக் கட்டுப்பாடு