×

காஞ்சிபுரம் வன்கொடுமை வழிகாட்டி மைய காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு, சமூக நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, அக்காலிப்பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால், காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம். என்ற முகவரியில் வரும் 22.5.2023ம் தேதி மாலை 5.45க்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் வன்கொடுமை வழிகாட்டி மைய காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,District ,Collector ,Aarti ,Tamil Nadu, ,Kanchipuram District ,Department of Social Welfare ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...