செங்கல்பட்டு: கோயில் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்து, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மணமை கிராமம் அம்பேத்கர் தெரு பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். எங்களது ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் போதிய இட வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். நிலமின்றி வசிக்கும் ஆதிதிராவிட மக்களாகிய எங்களுக்கு தலா 3 சென்ட் இடம் கேட்டு பல வருடங்களக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் தொடர்ந்து மனு அளித்துள்ளோம். எங்கள் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் அரசு தரிசு நிலத்தை 2014ம் ஆண்டு முறைகேடாக சூரத்தம்மன் கோயில் பெயருக்கு பட்டா வழங்கபட்டுள்ளது. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்து எங்களை போன்ற வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிடர் குடியிருப்பு வாசிகளுக்கு நில ஒப்படைப்பு சட்டத்தின்படி தலா 3 சென்ட் வழங்கிடுமாறு மீண்டும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
The post கோயில் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்து ஆதிதிராவிடர்களுக்கு வழங்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.