×

காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; தாம்பரம் ஆர்டிஓ விசாரணை

கூடுவாஞ்சேரி: காதலர் தினத்தன்று திருமணம் செய்த இளம் பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடமாவதால், தாம்பரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார். இதனால், கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டூர் கிராமம், ஐயனாரப்பன் கோயில் தெருவை சேர்ந்த பொன்னரசி (26) என்பவருக்கும், மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தன்று இரு வீட்டார் சம்பந்தத்துடன் சிங்கப்பெருமாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கணவருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் கணவர் வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீடான பாண்டூர் கிராமத்திற்கு பொன்னரசி வந்து தங்கி வந்துள்ளார். இதில், கணவரை பிரிந்து இருந்த காரணத்தால் மன வருத்தத்தில் இருந்து வந்த பொன்னரிசி தனது சாவுக்கு காரணம் எனது மாமியார் மற்றும் எனது கணவரின் அண்ணனும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து நேற்று முன்தினம் இரவு குடித்துள்ளார்.

இதில், நேற்று காலை வெகுநேரமாகியும் பொன்னரசி எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பொன்னரசியை எழுப்பிள்ளனர். அப்போது, அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அவரை மீட்டு பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தத்தினர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இது குறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் தாம்பரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; தாம்பரம் ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,RTO ,Tambaram ,Guduvancheri ,Dinakaran ,
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...