×

மாங்காய் பறித்தபோது மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

தாம்பரம்: சேலையூர் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சுந்தரி (60). தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர், கடந்த ஒரு மாதமாக வீட்டின் அருகே உள்ள ஜெயலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் முரளிதரன் என்பவரின் உடல்நலம் சரியில்லாத தாயார் பாக்கியலட்சுமி (80) என்பவரை பார்த்துக் கொள்ளும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற சுந்தரி, மாலையில், வேலை முடித்தவுடன் முதல் மாடிக்கு சென்று மாங்காய் பறித்துள்ளார்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சேலையூர் போலீசார், சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாங்காய் பறித்தபோது மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Sundari ,Kaithemillath Street ,Selaiyur ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!