×

தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி லோக் அதாலத்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் 13ம் தேதி லோக் அதாலத் நடக்கிறது. லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றத்தை ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டும் என்று ேதசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான லோக் அதாலத் வரும் சனிக்கிழமை (13ம் தேதி) நடக்கிறது. இதில் வாகன விபத்து இழப்பீடு, செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்கு தொடர்வதற்கு முந்தைய தாவாக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

லோக் அதாலத்தில் ஒரு வழக்கோ அல்லது சட்ட பிரச்னையோ முடித்துவைக்கப்பட்டால் அதன் மீது எந்த நிலையிலும் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால் லோக் அதாலத்தின் முடிவே இறுதியானது. இந்த முறையால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லட்சக்கணக்கான நிலுவை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி லோக் அதாலத் appeared first on Dinakaran.

Tags : Lok Adalat ,Tamil Nadu ,Chennai ,Tamilnadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...