×

ஓடும் பேருந்தில் செவிலியரிடம் நகை திருட்டு

பெரம்பூர்: திருமுல்லைவாயில், தென்றல் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (50). இவர் ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள நலவாழ்வு மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்ததும் வீட்டிற்கு மாநகர பஸ்சில் (தடம் எண் 35) புறப்பட்டார். ஓட்டேரி தாசமகான் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கியபோது, அவரது பையை கிழித்து, அதில் இருந்த 2 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் பேருந்தில் செவிலியரிடம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajalakshmi ,First Street, Theral Nagar, Tirumullaivai ,Otteri Nammalwarpet ,
× RELATED வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு...