×

விளக்கு ஏற்றிய போது விபரீதம் தீயில் கருகி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை

திருத்தணி: திருத்தணி ம.பொ.சி சாலை பழைய பஜார் தெருவை சேர்ந்தவர் வசந்தா(83). இவர், நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டில் உள்ள சாமி படத்துக்கு தீபம் ஏற்றியுள்ளார். அப்போது, விளக்கிலிருந்து திடீரென மூதாட்டியின் சேலையில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இவரின் அலறல் சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தார் அணைக்க முயற்சி செய்வதற்குள், உடல் முழுவதும் பரவியதில் தீ காயம் ஏற்பட்டு கருகினார். உடனே, வசந்தாவை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வசந்தா சிகிச்சை பலனலிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக பலியானார். இந்த, சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விளக்கு ஏற்றிய போது விபரீதம் தீயில் கருகி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Vasantha ,Tiruthani M.B.C Road Old Bazar Street ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது