×

பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய சென்னை நபர் தருமபுரியில் கைது

தருமபுரி: தருமபுரி, சேலம், கரூர், பொள்ளாச்சி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு, உடைத்து உள்ளே புகுந்து நகைகள், பணம் திருடி வந்த சென்னை கண்ணம்மா பேட்டையை சேர்ந்த கார்த்திக் (29) தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகியுள்ள கார்திக்கிடமிருந்து 37 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயமுத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் அம்பலம் தெரியவந்தது.

The post பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய சென்னை நபர் தருமபுரியில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dharmapuri ,Darumapuri ,Salem ,Karur ,Pollachi ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி