×

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த சோமநாய்க் சஞ்சய், கேசவரதன், அஜீஸ், பைசூலா ஆகிய 4 பேரும் வேளாங்கண்ணி வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது எழும்பிய ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். அஜீஸ், பைசூலா ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த சஞ்சய், கேசவர்த்தனை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Nagai District Vellankanni Sea ,Nagai ,Nagai district ,Vellankanni sea ,AP ,Chittoor Kubbam ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...