நார்வே : நார்வே நாட்டின் மன்னர் ஹெரால்டு தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எப்போதும் இடம் பிடிக்கும் மேற்கு ஐரோப்பிய நாடான நார்வே தேசத்தின் மன்னர் ஹெரால்டு வயது முதிர்வால் ஏற்பட்ட தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1937ல் பிறந்த ஹெரால்டு, தனது தந்தை மன்னர் ஓலாவின் மறைவை அடுத்து 1991ல் நார்வே நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
86 வயது மன்னர் ஹெரால்டு, மன்னராக பொறுப்பு வகிக்க முடியாமல் போகும் பட்சத்தில் அவரது 49 வயது இளவரசர் ஹாகோன் மன்னரின் நிர்வாக பொறுப்புகளை ஏற்பார். ஏற்கனவே கடந்த 2020,2021ம் ஆண்டுகளில் மன்னர் ஹெரால்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் கொரோனா தொற்றுக்கு அவர் உள்ளான போதும் இளவரசர் ஹாகோன் மன்னர் பதவியை ஏற்று இருந்தார்.
The post நார்வே நாட்டின் மன்னர் ஹெரால்டு தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதி!!! appeared first on Dinakaran.