×

தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை சொல்கிறது: நந்தினிக்கு தங்க பேனா வழங்கும் கவிஞர் வைரமுத்து..!!

சென்னை: ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை சொல்கிறது என்று கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும். கூலித் தொழிலாளியின் மகள் அபார சாதனை படைத்ததற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்

உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!

என்று தனது பதிவில் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

The post தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை சொல்கிறது: நந்தினிக்கு தங்க பேனா வழங்கும் கவிஞர் வைரமுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Poet Vairamuthu ,Nandini ,CHENNAI ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...