×

திருத்தணியில் சோகம்: துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்ற 2 சிறுமிகள் உள்பட 3 பேர் கல்குவாரியில் மூழ்கி பரிதாப பலி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்ற 2 சிறுமிகள் உட்பட 3 பேர் கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி பெரியார் நகரில் வசித்து வந்த பாபு என்பவர் கடந்த மாதம் 10ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்துபோனார். அவரது 30ம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லிகா(65), சிறுமிகள் கோமதி(13), ஹேமலதா (16) ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் மூவரும் உடல் உபாதை கழிப்பதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அப்போது 50 அடி ஆழம் கொண்ட குவாரி கிணற்றில் சிறுமிகள் இருவரும் தவறி விழுந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற மல்லிகாவும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் உடலையும் மீட்டு திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருத்தணியில் சோகம்: துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்ற 2 சிறுமிகள் உள்பட 3 பேர் கல்குவாரியில் மூழ்கி பரிதாப பலி..!! appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Calvary ,Tiruvallur ,Thiruvallur district ,Thiruthani ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...