×

தமிழக அரசுக்கு கோரிக்கை திருவாரூர் அதானி, அம்பானி கும்பல் நாட்டை சூறையாடுகிறது

திருத்துறைப்பூண்டி,மே9: அதானி, அம்பானி கும்பல் நாட்டை சூறையாடுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்டிமேடு ஊராட்சியில் பாஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற பிரச்சார நடைபயணத்ைத விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்திரா, மாரியம்மாள், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயபால், திருமூர்த்தி, கிளை செயலாளர்கள் மதியழகன், ராஜேந்திரன், சுதாகர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குன்னூர் ஊராட்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பாஸ்கர் துவக்கி வைத்து பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் ரூ. 15 லட்சம் குடும்பத்தின் வங்கி கணக்கில் வழங்குவோம். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, கருப்பு பணத்தை ஒழிப்பு, விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு அதிக விலை கிடைக்க செய்வேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளிக்கப்பட்டது.
9 ஆண்டுகள் கடந்தும் இது எதுவும் நடக்கவில்லை.

அதானி, அம்பானி கும்பல் நாட்டை சூறையாடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.450. இன்றைய ஆட்சியில் ரூ.1150 ஆக உயர்ந்து விட்டது. 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.89 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு இந்த ஆண்டு ரூ.29 ஆயிரம் கோடி குறைத்து பெரும் ரூ. 60,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்். பிரச்சார பயணத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய நிர்வாககுழு உறுப்பினர் குருமணி, ஊராட்சி தலைவர் சுபிதா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், ஜமுனா, சுரேஷ், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் ஊராட்சி வெள்ளங்கால் கிராமத்தில் இந்த பிரச்சார பயணம் தொடங்கியது. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு தலைமை வகித்தார். பிரச்சார பயணத்தை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து துவக்கி வைத்து துண்டு பிரசுரம் வழங்கினார். பிரச்சார பயணம் கீழபெருமழை, மேலபெருமழை கிராமங்களுக்கும் சென்று மக்கள் மத்தியில் பாஜக அரசின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டியும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் நிர்வாகிகள் குணசேகரன், ராஜா, பிரஷ் நேவ், பரிமளா, நீலமேகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழக அரசுக்கு கோரிக்கை திருவாரூர் அதானி, அம்பானி கும்பல் நாட்டை சூறையாடுகிறது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Adani ,Tamil Nadu government ,Tiruthirupundi ,Communist Party of India ,Ambani ,TN Government ,Thiruvarur Adani ,Dinakaran ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...