திருப்பூர், மே 9: திருப்பூர் ராயபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்றபதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயபுரத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த அறிவுமதி (19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அறிவுமதியை கைது செய்தனர். இதேபோன்று விக்னேஷ்(19) என்பவரிடம் 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

