×

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

 

ஈரோடு, மே 9: ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(74). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டிற்கு அருகே உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் கிருஷ்ணசாமி தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கிருஷ்ணசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Krishnasamy ,Kullampalayam, Perundurai Dudupathi, Erode district ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...