- திருவில்லிபுத்தூர்
- திலகம்
- விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
- திருவில்லிபுட்டூர்
- முதன்மை அமர்வு நீதிமன்றம்
திருவில்லிபுத்தூர், மே 9: விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திலகம் பதவியேற்றுக் கொண்டார். திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த கிறிஸ்டோபர் அரியலூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த மாதம் 28ம் தேதி நியமிக்கப்பட்டார். அதேபோல் திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் நியமிக்கப்பட்டார். நேற்று திருவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி திலகம் பதவியேற்றுக் கொண்டார்.
The post முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு appeared first on Dinakaran.