×

வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

வருசநாடு, மே 9: வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. வருசநாடு ஊராட்சி தர்மராஜபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். இந்த மையம் கட்டி முடிக்கப் பட்டு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப் படாததால் கட்டிடம் பழுதடைந்து கீழே இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது . இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் அங்கன்வாடி மையத்தை இடித்து, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து பழைய கட்டிடத்தை இடித்து ரூ. 11.97 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கு கிராம பொதுமக்கள் அங்கன்வாடி மைய நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த பணிகளை ஒன்றியக் குழு தலைவர் சித்ரா சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி, உதவி பொறியாளர் ராமமூர்த்தி, ஒப்பந்ததாரர் சுப்புராஜ் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

The post வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Dharmarajapuram ,Varusanadu ,Anganwadi center ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...