×

லாரி மோதி மூதாட்டி பலி

 

கீழக்கரை, மே 9: கீழக்கரை அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் மனைவி சாரா உம்மா(70). நேற்று காலை கீழக்கரைக்கு பணியின் காரணமாக வந்துள்ளார். அவர் கொந்த கருணை அப்பா தர்கா வழியாக கீழக்கரைக்கு வரும்போது தண்ணீர் லாரியை பின்புறமாக டிரைவர் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த சாரா உம்மா மீது லாரியின் டயர் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கீழக்கரை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து லாரியை ஓட்டி வந்த கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த மாடசாமி மகன் பழனி குமார்(25) என்பவரை கைது செய்தனர்.

The post லாரி மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Keezhakarai ,Sarah Umma ,Muhammad Ibrahim ,Natham ,Bali ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...