×

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் தாருண்யா (17). இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்து விட்டனர். எனவே தனது பாட்டி மல்லிகாவின் கண்காணிப்பில் தாருண்யா வளர்த்து வந்துள்ளார். இவர் 12ம் வகுப்பில் கம்ப்யூட்டர் மற்றும் காமர்ஸ் குரூப்பை தேர்ந்தெடுத்து படித்துள்ளார். இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், காமர்ஸ், அக்கவுண்ட்ஸ் ஆகிய பாடங்களில் 20 மற்றும் 33 மதிப்பெண் பெற்று மாணவி தாருண்யா தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தாருண்யா தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அருகில் இருந்தவரின் உதவியோடு தாருண்யாவை மீட்ட மல்லிகா, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தாருண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தாருண்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Tharunya ,Aaur Muthiah Street, Pudu Vannarpet ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...