×

கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனே நிறுத்த உத்தரவு: டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவித்தது. வரும் 15ம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தி உள்ள அந்நிறுவனம், வரும் 12ம் தேதி வரையிலான விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு நேற்று நோட்டீஸ் விடுத்துள்ளது.

அதில், மறுஉத்தரவு வரும் வரை கோ பர்ஸ்ட் நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனை செய்யக் கூடாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உத்தரவிட்டுள்ளது.

The post கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனே நிறுத்த உத்தரவு: டிஜிசிஏ நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : GoFirst Airlines ,DGCA ,New Delhi ,Go First ,Dinakaran ,
× RELATED விமான பயணத்தின்போது பெற்றோருக்கு...