×

நேபாளத்தில் 10 இந்தியர்கள் கைது

காத்மண்டு: நேபாளத்தில் சட்டவிரோதமாக அந்நாட்டின் குடியுரிமை சான்றிதழை பெற்றதாக 10 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் காத்மண்ட் நகரின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெவ்வேறு தேதிகளில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து குடியுரிமை சான்றிதழ் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 10 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து நேபாள குடியுரிமை சான்றிதழ், அடையாள அட்டை, இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் 10 இந்தியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Indians ,Nepal ,Kathmandu ,Kathmond ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...