×

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி-கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்

ஸ்பிக்நகர் : தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் தூர் வாரும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் உள்ள வைகுண்டம் வடகால் கடைசியில் இக்குளம் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும். இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும், உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர். பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967ல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் 2262 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழை, உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. வெள்ள நேரங்களில் கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் உபரிநீர், 24 மதகுகள் மூலம் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஓடையில் நெருக்கமாக வளர்ந்துள்ள சீமை உடை மரங்களாலும் தனியார் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் விரைவாக செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஓடையின் கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுவது தொடர் கதையாக இருந்தது.

பொதுவாக கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை பொறுத்தவரை, மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக தண்ணீரை வெளியேற்றுவதும், பயிர்கள் வெள்ளத்தில் சேதமாவதுமே தொடச்சியாக நிகழ்ந்தது. கோடை காலங்களில் அதற்கு நேர் மாறாக, குளம் தண்ணீரின்றி காய்ந்து விடுவதும், பயிர்கள் கருகி விடுவதுமே தொடர்ந்து நிகழ்கிறது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோரம்பள்ளம் குளம் தூர் வாருதல் மற்றும் சூழலியல் பூங்காவிற்கு மண் வழங்குதலுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். விழாவிற்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பூங்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஒன்றிய குழு துணைத்தலைவரும் பகுதி செயலாளருமான ஆஸ்கர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுரேஷ், சுந்தரபாண்டியன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜதுரை, முத்துவேல், விஜயகுமார், விவசாய சங்கத்தலைவர் பூபதி, செயலாளர் ரகுபதி, பொருளார் கந்தசாமி,

ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, நிர்வாகிகள் தங்கவேல், அகஸ்டின் ஜெபராஜ், மதியகழன், தானியேல், முன்னாள் தலைவர்கள் அழகுராஜா ஜெபராஜ், திருமணி, திமுக வட்டச்செயலாளர்கள் வசந்தி பால்பாண்டி, சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், கருப்பசாமி, ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் மாலா சின்கா மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சித்திரைபுஷ்பம், பகுதி துணைச்செயலாளர் கல்பனா, நீர்பாசன சங்க தலைவர் தனலட்சுமி, காலங்கரை செயலாளர் ராஜ், பிரதிநிதி ராமசந்திரன், தாமிரபரணி நதிநீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் உதவி பொறியாளார் பாஸ்டின் வினு, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, அற்புதராஜ், முத்துமாணிக்கம், பாஸ்கர், பால்பாண்டி, முன்னாள் பகுதி செயலாளர் பொன்னரசு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தாசில்தார் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்

விழாவில் கனிமொழி எம்பி பேசுகையில், ‘இந்தக்குளம் தூர்வாருவதன் மூலம் கொள்ளளவு அதிகரிக்கும். தூத்துக்குடி வாழ் மக்களின் அமைதியான, மகிழ்ச்சியான, சுகாதார நலம், சமூகநல்லிணக்கம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகைளுக்கு மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளில் முக்கியமானதாக உயர்த்தப்பட்ட தள அமைப்பில் ஒரு சூழலியல் பூங்கா அமைப்பதும் ஒன்றாகும்.

அந்தப்பணிக்காக தாமிரபரணி ஆற்றுப்பாசன அமைப்பில் இடம்பெற்றுள்ள வடகால் பாசனத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்திலிருந்து மண்ணை எடுத்து சென்று பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தபணியை செய்வதன் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள சூழலியல் பூங்காவில் தரைமட்டம் உயர்த்தப்படுவதோடு, கோரம்பள்ளம் குளத்தின் கொள்ளளவு அதிகரிக்கும். மேலும், அத்திமரப்பட்டி, காலாங்கரை, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3,525 விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் உயரும்’ என்றார்.

The post கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி-கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Korampallam ,Kanimozhi MP ,Spignagar ,Korampallam pond ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை