×

ராஜஸ்தான் ஹனுமன்கர் அருகே விமானப்படையின் மிக் -21 ரக விமானம் வீட்டுக்குள் விழுந்ததில் 3 பேர் பலி..!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ஹனுமன்கர் அருகே விமானப்படையின் மிக் -21 ரக விமானம் வீட்டுக்குள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஹனுமன்கர் மாவட்டத்தின் டப்லி கிராமத்தில் உள்ள வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததால் விமானிக்கு சிறிய காயம் ஏற்பட்டது . வீட்டில் நடந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்ததுடன் ஒரு ஆணும் உயிரிழந்ததாக விமானப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த ஆண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இந்த விபத்தில் பைலட் உயிர் தப்பியதாகவும், ஜெட்டில் பயணித்த மூவர் உயிர் இழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு ராணுவம் விரைந்துள்ளது. சூரத்கர் என்ற இடத்தில் இருந்து ஜெட் விமானம் புறப்பட்டுள்ளது.முன்னதாக ஜனவரி மாதம், ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியின்போது இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் (Sukhoi Su-30 மற்றும் a Mirage 2000) விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கிய நிலையில், மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் விழுந்து நொறுங்கியது.

இதே போன்று கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு இருக்கைகள் கொண்ட மிக்-21ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற நிலையில் விமானத்தில் வேறு ஏதேனும் டெக்னிகள் பால்ட் இருக்கின்றதா போன்ற விவரங்களை கண்டறிவதற்கு இந்திய விமானப்படை விசாரணையை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் துருதிஷ்ட வசமாக இந்த விபத்து நடந்திருக்கின்றது.

The post ராஜஸ்தான் ஹனுமன்கர் அருகே விமானப்படையின் மிக் -21 ரக விமானம் வீட்டுக்குள் விழுந்ததில் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Air Force ,Hanumangar, Rajasthan ,Jaipur ,Rajasthan Hanumangar ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...