புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஊரெங்கும் திருவிழா, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். இங்கு அதிகாலை ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் சித்திரை திருவிழா களைக்கட்டியுள்ளதால் ஆடுகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.
வழக்கமாக 8 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோகும் 10 கிலோ எடை கொண்ட ஆடு 12 ஆயிரத்திற்கும், 12 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விராலிமலை ஆட்டுச் சந்தையில் காலை 8 மணி நிலவரப்படி ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நேர்த்தி கடனை நிறைவேற்ற சில பக்தர்கள் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளை வாங்கிச் செல்வதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
The post விராலிமலை ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்: ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம்.. வியாபாரிகள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.