×

பட்டதாரி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இன்ஜினியருக்கு வலை

 

தர்மபுரி, மே 8: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே செங்கானூரைச் சேர்ந்தவர் கவிதா(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்எஸ்சி முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். இதே ஊரைச் சேர்ந்த சின்னதம்பி மகன் அஜித்குமார் (23). சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அஜித்குமாருடன், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய அஜித்குமார், கவிதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள அஜித்குமார் மறுத்ததுடன், பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த கவிதா, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

The post பட்டதாரி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இன்ஜினியருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Kavita ,Chenganur ,Bennagaram, Darmapuri District ,MSC ,Dinakaran ,
× RELATED ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்