×

குன்னம் அருகே வயலப்பாடியில் காய்கறி வாரச்சந்தை துவக்க வேண்டும்

குன்னம், மே 8: வயலப்பாடி கிராமத்தில் காய்கறி வார சந்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வயலப்பாடி ஊராட்சி கீரனூர் மற்றும் வீரமநல்லூர் உள்ளிட்ட ஒரு பெரிய ஊராட்சியாகும். இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள அரியலூர் மற்றும் 8 கிமீ தொலைவில் உள்ள திட்டக்குடி செல்ல வேண்டும். வயலப்பாடி அருகிலுள்ள வேப்பூரில் புதன்கிழமையும் கோவில் பாளையத்தில் வெள்ளிக்கிழமை காய்கறி வார சந்தை நடைபெற்று வருகிறது. வயலப்பாடியில் பிரதி வாரம் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படும். எனவே வயலப்பாடி கிராமத்தில் காய்கறி வாரச்சந்தை அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னம் அருகே வயலப்பாடியில் காய்கறி வாரச்சந்தை துவக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kunnum ,Kunnam ,Vyalapadi ,Perambalur District ,Gunnum ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் முருகன் கோயிலில் அன்னப்படையல் விழா