×

அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்தவர் கைது

காரைக்கால்,மே8: காரைக்கால் நகர காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் உத்தரவின் பேரில் எஸ்.ஐ மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கும் மற்றும் ஏறும் பெண்களிடம் விசில் அடிப்பது, கண் அடித்து போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். இதை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரைக்கால், கீழகாசாகுடி சேர்ந்த பக்கிரிசாமி(44) என்பது தெரியவந்தது. பின்னர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Karaikal City Police ,Inspector ,Purushothaman ,SI Mohan ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...