×

கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளித்தபோது விபரீதம் கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

ஆவடி மே. 8: கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆவடியை அடுத்து பட்டாபிராம் தண்டரை பகுதியை சேர்ந்தவர் இமானுவேல்(18). இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கல்லூரி நண்பர்களுடன் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியூர் கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, கரை புரண்டு ஓடிய கிருஷ்ணா கால்வாயில் நீரின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. இதில், இமானுவேல் அடித்து செல்லப்பட்டார். அவரை சக நண்பர்கள் மீட்க முயற்சி செய்தும், மீட்க முடியவில்லை. இதில், இவரது நண்பர்கள் கால்வாய் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து, நேற்று காலை வெள்ளனுர் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் ஆவடி டேங்க் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆவடி தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், நடத்திய விசாரணையில், வெங்கல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் இம்மானுவேல் எனத் தெரியவந்தது.இதனை தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளித்தபோது விபரீதம் கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Krishna river canal ,Avadi ,Aavadi ,Mishap ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...