×

மனைவியை தாக்கிய கணவனுக்கு வலை

 

விருதுநகர், மே 8: மனைவியை தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் காந்திநகரை சேர்ந்தவர் தனசேகரன்(32). இவரது மனைவி ராஜேஸ்வரி(29). இருவரும் 2016ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ராஜேஸ்வரியிடம் தனசேகரன் பணம் கேட்டுள்ளார். அவர் இல்லையென கூறியதும், அவரது தந்தையிடம் கேட்டு வாங்கி தருமாறு மிரட்டியுள்ளார்.

தந்தையும் இல்லையென கூறியதை தொடர்ந்து, ராஜேஸ்வரியை ெகாடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார்.  தகவல் அறிந்து ராஜேஸ்வரியின் தந்தை, தங்கை வந்து அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ரூரல் போலீசார் தனசேகரனை தேடிவருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Net ,Virudhunagar ,Thanasekaran ,Gandhinagar, Virudhunagar ,Dinakaran ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்