×

போடி மலைப்பகுதியில் தொடர்மழை மூக்கறை பிள்ளையார் தடுப்பணை மறுகால் பாய்கிறது விவசாயிகள் மகிழ்ச்சி

 

போடி, மே 8: போடி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொட்டக்குடி ஆற்றில் உள்ள மூக்கறை பிள்ளையார் தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் கொட்டக்குடி ஆற்றில் உள்ள மூக்கறை பிள்ளையார் மெகா தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தடுப்பணையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் குளித்து மகிழ்கின்றனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனால் தடுப்பணையை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post போடி மலைப்பகுதியில் தொடர்மழை மூக்கறை பிள்ளையார் தடுப்பணை மறுகால் பாய்கிறது விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bodi Hills ,Mookkarai Pilliyar barrage ,Bodi ,Mookkara Pilliyar ,Kottakudi ,Mookkara Pilliyar barrage ,Dinakaran ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது