×

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

 

கொடைக்கானல், மே 8: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை குண்டுபட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அஜித் குமார் எடுத்து பணிகள் செய்து வந்துள்ளார் .

இந்நிலையில் குண்டுபட்டி பகுதியைச் சேர்ந்த சிவா (24), ஜெயக்குமார்(39) ஆகிய இருவரும் தார்சாலை சரியாக அமைக்கவில்லை என்று கூறி ஒப்பந்ததாரர் அஜித்குமாரிடம் தகராறு செய்து உள்ளனர். மேலும் நாங்கள் பிரச்னை செய்யாமல் இருக்க எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். இது குறித்து கொடைக்கானல் போலீசில் அஜித்குமாரின் அளித்த புகாரின் சிவா மற்றும் ஜெயக்குமாரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

The post கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Melammalai ,Kodaikanal ,Kodaikanal Melmalai ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...