×

பழநியில் மஞ்சப்பை விழிப்புணர்வு

 

பழநி, மே 8: பழநி பஸ்நிலையத்தில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தது. கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் பழனிச்சாமி, நகராட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு, அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பழநியில் மஞ்சப்பை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Palani ,Manjapai ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை