×

பல்லடம் அருகே திமுகவில் செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் 300 பேர் இணைப்பு

 

பல்லடம், மே 8: பல்லடம் அருகே மாற்று கட்சியினர் 300 பேர் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பல்லடம் அருகே பூமலூர் ஊராட்சி, சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 300 பேர் விலகி பல்லடம் அக்ரோ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் தலைமையில் பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எ.நடராஜன், வார்டு உறுப்பினர் தங்கராஜ், சத்தியா, சுக்கம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் மருதாசலமூர்த்தி, கோடாங்கிபாளையம் ராசு, இச்சிப்பட்டி பார்த்திபன் உள்பட 300 பேர் திமுகவில் இணையும் விழா கிடாத்துறைபுதூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி கரை போட்ட இரு வண்ண சால்வை அணிவித்து திமுகவில் வரவேற்று இணைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ பேசியதாவது: பல்லடம் தொகுதி பூமலூர் ஊராட்சி கிடாத்துறைபுதூர் கிராமம் தான் எனது தந்தையை பெற்ற தாயார் ஊர் ஆகும். இந்த மண்ணில் தான் எனது சொந்த பந்தங்களும் ஏராளமானவர்கள் உள்ளனர். இப்பகுதியில் திமுகவிற்கு அதிக வாக்கு கிடைக்காமல் இருந்து வந்தது, எனக்கு நீண்ட நாள் மிகுந்த வருத்தமாக இருந்து வந்தது.

The post பல்லடம் அருகே திமுகவில் செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் 300 பேர் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Selvaraj ,DMK ,Palladam ,Palladam Tiruppur North District ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...