×

வணிக வளாகத்தில் வெறிச்செயல் துப்பாக்கி சூட்டில் குழந்தை உள்பட 9 பேர் பலி

ஹுஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் ஆலன் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. மிகவும் நெரிசல் மிகுந்த இந்த வணிக வளாகத்தினுள் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்து விட்டனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றனர். வணிக வளாகத்தில் வேறு யாரும் துப்பாக்கியுடன் உள்ளனரா? என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். 2023ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 198 துப்பாக்கி சூடுகள் நடந்துள்ளதாகவும், இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி விட்டதாகவும் ஒரு தொண்டு நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வணிக வளாகத்தில் வெறிச்செயல் துப்பாக்கி சூட்டில் குழந்தை உள்பட 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Houston ,Allen ,Dallas, Texas ,
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...