புதுடெல்லி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஞ்சாப் ஆம்ஆத்மி அமைச்சர் லால் சந்த கட்டாருசக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜ வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உணவுத் துறை அமைச்சராக இருப்பவர் லால் சந்த் கட்டாருசக். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குர்தாஸ்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தன் குடும்பத்துக்கு அமைச்சர் மிரட்டல் விடுப்பதாகவும் அந்த வாலிபர் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பஞ்சாப் ஆம்ஆத்மி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான லால் சந்த் கட்டாருசக் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜ செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வலியுறுத்தினார்.
The post அரசு வேலை தருவதாக கூறி வாலிபருக்கு பஞ்சாப் அமைச்சர் பாலியல் தொல்லை: ராஜினாமா செய்ய பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.