×

பற்களை பிடுங்கிய சம்பவம்: தனியார் நிறுவன ஊழியருக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன்

நெல்லை:நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது ெதாடர்பான புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ டிரைவர் வேதநாராயணனுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு நெல்லை அரசு மருத்துவமனை டீனுக்கு, சிபிசிஐடி ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் பிரிவு கடிதம் அனுப்பி உள்ளது.

பாதிக்கப்பட்ட அருண்குமார், பெங்களூருவில் பணிபுரிந்து வருவதால், கடந்த 5ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வில்லை. நாளை மறுநாள் (10ம் தேதி) ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் பிரிவில் ஆஜராக அவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கண்டிப்பாக 10ம் தேதி காலையில் ஆஜராகுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

The post பற்களை பிடுங்கிய சம்பவம்: தனியார் நிறுவன ஊழியருக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Private ,Nellai ,Ambai, VK.puram ,Kallidaikurichi ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார்...